Contact Us

Wednesday, 9 December 2015

9/12/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிவை சந்தித்தன. அதிலும் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன பங்குச்சந்தைகள். உலகளவில் கச்சா எண்ணெய் விலை பெரிதும் சரிந்தது, சரக்கு மற்றும் சேவை வரி மீதான எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. 
நேற்றைய நிப்டி 63 புள்ளிகள் சரிந்து 7701 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 162 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 7691 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சென்னையில் வெள்ளம் ஏற்பட் டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பேர் இஎம்ஐ தொகையை உரிய காலத்திற்குள் கட்ட முடியாத சூழல் உருவாகி யுள்ளது.
நேற்று ஐசிஐசிஐ வங்கி சென்னை வாடிக்கையாளர்கள் நவம்பர் மாதத்திற்குரிய இஎம்ஐ தொகையை தாமதமாக செலுத்தினால் அபராத தொகை விதிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது. மேலும் இந்தக் காலக்கட்டத்தில் பணம் இல்லாமல் காசோலை திரும்பினாலும் எந்தக் கட்டணமும் விதிக்கப்பட மாட்டது என்று ஐசிஐசிஐ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஹெச்டிஎப்சி வங்கி சென்னை யில் சில இடங்களில் சில்லரை விற்பனை மையங்களை (பிஓஎஸ்) அமைத்துள்ளது. மயிலாப்பூர் ஆர்.கே சாலை மற்றும் கோபால புரத்திலும் இயங்குகிறது. மக்கள் தங்களது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி 5,000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம். சென்னையில் மேலும் 5-6 இடங்களில் இதுபோன்ற விற்பனை யகங்களை ஏற்படுத்த இருக்கிறோம் என்று ஹெச்டிஎப்சி கூறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஹெச்டிஎப்சி வங்கி மழையால் பாதிக்கப்பட்ட வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் நவம்பர் மாதத்துக்குரிய இஎம்ஐ தொகையை தாமதமாக கட்டினால் அபராத தொகை கிடையாது என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கி சேவையை துவங்குமாறு நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டது. ஏடிஎம் மற்றும் மற்ற சேவைகளை விரைவில் வழங்குமாறும் அனைத்து வங்கி களையும் கேட்டுக் கொண்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து வங்கிகளும் இன்று திறக்கப்படும். அதுமட்டுமல்லாமல் அதிக நேரம் இயங்க இருக்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்யு மாறு அனைத்து பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடமும் நிதியமைச்சகம் கேட்டுக் கொண் டது.
ரிலையன்ஸ் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஏஜெண்ட் மற்றும் விற்பனை ஊழியர்கள் மூலம் சென்னையில் அனைத்து வாடிக்கையாளர்களும் நலமுடன் உள்ளார்களா என்று சரிபார்க்க கூறியிருக்கிறது. சென்னையில் 1.5 லட்சம் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு உள்ளார்கள்.
நிப்டி சப்போர்ட் 7666,7633
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7755,7777,7808
10-Dec-2015Details
Splits
J Kumar Infraprojects Ltd
Dividends
Colgate-Palmolive (India) Ltd
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM