Contact Us

Monday, 15 February 2016

15/2/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகள் இந்தவாரம் கடும் சரிவை சந்தித்து இருக்கிறது. 
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாகவும், ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியாலும், அந்நிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறியதாலும் கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக‌வே பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்து வந்தன. குறிப்பாக இந்தவாரம் கடுமையாக சரிந்தன.
இந்தவாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1,630.85 புள்ளிகளும், நிப்டி 508.15 புள்ளிகளும் சரிந்தது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு ஒருவாரத்தில் அதிக சரிவை சந்தித்தது இந்த வாரம் தான். 
இதனிடையே இந்திய பங்குச்சந்தைகள்  சிறிய ஏற்றத்துடன் முடிந்தன. முன்னதாக வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை‌ செய்ததால் பங்குச்சந்தைகள் சரிந்தன. இருப்பினும் வர்த்தகம் முடியும் போது சிறிய ஏற்றத்துடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 4 புள்ளிகள் உயர்ந்து 6980 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 313 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 350 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 90 புள்ளிகள் உயர்வுடன் 7070 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பொருளாதார நெருக்கடியால், வங்கி துறை பாதிக்கப்பட்ட நிலையிலும், சிட்டி யூனியன் வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த, நடப்பு நிதியாண்டின், ஒன்பது மாத காலத்தில், வங்கியின் டிபாசிட், 25 ஆயிரத்து 959 கோடி ரூபாயாகவும், வழங்கிய கடன், 19 ஆயிரத்து 374 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், வங்கியின் மொத்த வணிகம், 40 ஆயிரத்து 171 கோடி ரூபாயில் இருந்து, 45 ஆயிரத்து 334 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், நிகர வட்டி வருவாய், 253 கோடி ரூபாய்; மொத்த லாபம், 207 கோடி ரூபாய்; நிகர லாபம், 113 கோடி ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது
ஆந்திரா வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 83 சதவீதம் சரிந்து 34.4 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 201 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
மொத்த வருமானம் சிறிதளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 4,540 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 4,801 கோடி ரூபாயாக இருக்கிறது. வாராக்கடன்களுக்காக ஒதுக்கப் பட்ட தொகை கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு உயர்ந்திருக்கி றது.
கடந்த வருடம் 541 கோடி ரூபாய்க்கு ஒதுக்கப்பட்டது. இப் போது ரூ.905 கோடி ஒதுக்கப்பட் டிருக்கிறது. கடந்த வருடம் மொத்த வாராக்கடன் 5.99 சதவீத மாக இருந்தது. இப்போது அதி கரித்து 7 சதவீதமாக இருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 3.7 சதவீதத்தில் இருந்து 3.89 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 6960,6888
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7055,7122
உயர்
15 feb details
divident
srf
g.e.ship
tube invest
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM