Contact Us

Wednesday, 31 December 2014

உள்ளத்தை ஊன்றுகோலாக்கு..!
ஊனம்… ஊனம்…
உந்தன் தோற்றம் குடுவையில் அடையட்டும்,
இலட்சியங்களைக் கடலில் வீசு
தடைகள் அலைகள் போல் அலையவிடுகிறதா?
இங்கும் அங்குமென!
சோர்ந்து விடாதே…!
சுழன்று எழு.
கடலின் முத்துக்கள் உன் கையில்
நீ அடைய வேண்டிய கரை
வெகு தூரமில்லை!
உள்ளத்தை ஊன்றுகோலாக்கு
பார்வையை கரைமேல் வைத்து-அதை
களங்கரை விளக்காய் நிறுத்து! அதுவே
வெற்றி முரசுகொட்டும் உம் செயலுக்கு…!