** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday 21 September 2014

நீங்கள் வாழ்வில் வெற்றியடைய.....

ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.
எதையும் வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம்.
நீங்கள் வாழ்வில் வெற்றியடைய......

உங்கள் கடமைகளை, உங்கள் பணிகளை ஒழுங்காகச் செய்யுங்கள். அவற்றிற்காகவே உங்களை முழுக்க முழுக்க அர்பணித்துக் கொள்ளுங்கள். வெற்றியும் பாராட்டும் தானாகவே ஒரு நாள் உங்கள் காலடியில் வந்து நிற்கும்.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 230: 
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் 
ஈதல் இயையாக் கடை.
உரை:
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
Translation: 
'Tis bitter pain to die, 'Tis worse to live. 
For him who nothing finds to give!.
Explanation: 
Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.