** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 30 December 2014

>>>>வாழ்வில் வெற்றி அடைய எளிய வழிகள்<<<<<
யாருக்காவது உதவும் என்னும் நோக்கில் பதிவிடுகிறேன்.
மாபெரும் திட்டங்கள் வகுப்பது ஒரு புறம் இருக்கட்டும். தினமும் சில எளிதான இலக்குகளை Easy Targets குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அன்றைய பொழுது சாய்வதற்குமுன் இதைச்செய்து முடித்துவிடுவேன் என்ற முனைப்புடன் செயலாற்றுங்கள்.
‘அட! நம்மால் நினைத்ததைச் செய்து முடிக்க முடிகிறதேÐ என்ற நம்பிக்கை உற்சாக ஊற்று உங்கள் உள்ளத்தில் பீறிட்டு எழுவதை உணர்வீர்கள்.
தினமும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவிர, உங்கள் வாழ்வின் உயர் லட்சியத்தை Life Project அடையும் நோக்கில், 10 பணிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை எப்படியும் அன்றைய பொழுதிற்குள் செய்து முடிக்க உறுதியுடன் செயல்படுங்கள். இரவு படுக்கும் முன் எவ்வளவு தூரம் நம் பணிகளை முடித்திருக்கிறோம் என்று மதிப்பீடு செய்து பாருங்கள். விகடனின் விமர்சனக் குழு மார்க் போடுவதûப் போல இது போன்ற தினசரி மதிப்பீடு ‘Self-assessment’ நீங்கள் உங்கள் நேரான பாதையை விட்டுவிலகாமல், உங்களைக் காப்பாற்றும், ஒரே வெட்டில் மரம் வீழ்ந்து விடுவதில்லை.
நீண்ட தூரங்களையும் ஒவ்வொரு மைலாகத்தான் கடக்க வேண்டும். நம் இலட்சிய மாளிகையை அடைய ஒவ்வொரு அடியாகத் தொடர்ந்து, நேரான பாதையில் நடை போடுவோம். சிறுசிறு வெற்றிகளையும் கொண்டாடும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வோம்.
சிந்தனையில் தெளிவும், செயலாற்றுவதில் உறுதியும் இருக்கும் வரை எந்தச் சக்தியாலும் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது.
30/12/2014..செவ்வாய்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/


வார வர்த்தகத்தின் முதல்நாளான நேற்றைய நமது சந்தை 46 புள்ளிகள் உயர்வுடன் 8246 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
 ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. 
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் சிறிய சரிவுடன் முடிவடைந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் சிறிய சரிவுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தை இன்று 15 புள்ளிகள் உயர்வுடன் 8261 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8211,8188
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8277,8311
அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசாக்கள் குறைந்து ரூ.63.70 என்ற அளவில் உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை அதிகரித்ததன் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளியை விட 2014-ம் ஆண்டு பங்குச்சந்தை நல்ல லாபத்தை கொடுத்தது. தொடர்ந்து மூன்றாவது வருடமாக பங்குச்சந்தைகள் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. புதிய அரசு பொறுப்பேற்றது, முதலீட்டாளர்களின் மன நிலை மாறியது, அந்நிய முதலீடு அதிகரித்தது ஆகிய காரணங்களால் இந்திய பங்குச்சந்தை நடப்பாண்டில் 30 சதவீதம் உயர்ந்து. 28822 என்ற உச்சபட்ச புள்ளியை நவம்பர்
28-ம் தேதி சென்செக்ஸ் தொட்டது. மாறாக தங்கத்தின் விலை நடப்பாண்டில் 9 சதவீதம் சரிந்தது. அதேபோல வெள்ளியின் விலை நடப்பாண்டில் 15.43 சதவீதம் சரிந்தது. பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தங்கம் தொடர்ந்து மூன்றாவது ஆண் டாக பிரகாசிக்கவில்லை.
பங்குச்சந்தை உயர்வதால், தங்கத்தில் இருக்கும் முதலீட்டை வெளியே எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்ததாக பங்குச்சந்தை வல்லு நர்கள் தெரிவித்தார்கள். மேலும் 2015-ம் ஆண்டு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், டாலருக்கு தேவை அதிகரித்து, தங்கத்தின் விலை மேலும் குறையலாம் .

நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 FTSE 100 6,633.51 6,651.96 +23.58 +0.36%
 S&P 500 2,090.58 2,093.55 +1.81 +0.09%
 CAC 40 4,317.93 4,317.93 +22.08 +0.51%
 Dow 30 18,038.23 18,073.04 -15.48 -0.09%
 DAX 9,927.13 9,927.85 +5.02 +0.05%
 Hang Seng 23,740.00 23,851.00 -33.18 -0.14%

http://panguvarthagaulagam.blogspot.in/
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 322:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
 உரை:
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.
Translation:
Let those that need partake your meal; guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives.
Explanation:
The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.