** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 1 December 2014

1/12/2014 .திங்கள்.. நிப்டி நிலைகள்
http://panguvarthagaulagam.blogspot.in/

வெள்ளியன்று முடிந்த நமது நிப்டி 94 புள்ளிகள் உயர்வுடன் 8588 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச் சந்தையில் மிகப் பெரும் எழுச்சி ஏற்பட்டது. பங்குச் சந்தையில் 255 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 28693 புள்ளிகளைத் தொட்டது. 
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தொடர்ந்து இதே அளவு உற்பத்தி செய்வதென்ற முடிவு செய்ததும், கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் சந்தை ஏற்றத்துக்கு காரணமாகும்.
ரிசர்வ் வங்கி அடுத்த வாரம் நிதிக் கொள்கை அறிவிக்க உள்ள நிலையில் வங்கி்ப் பங்குளும் அதிக அளவில் ஏற்றம் பெற்றன. இதில் எஸ்பிஐ பங்கு விலை அதிகபட்சமாக 5 சதவீதம் உயர்ந்தன. ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவற்றின் பங்குகளும் கணிசமாக உயர்ந்தன.
முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு முதல் முறையாக ரூ. 100 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. வர்த்தக இறுதியில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 98,81,550 கோடியாக இருந்தது. முன்தினம் இது ரூ. 87,550 கோடியாக இருந்தது.
பங்குச் சந்தையில் மொத்தம் 1,509 பங்குகள் ஏற்றம் பெற்றன. 1,518 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. மொத்த வர்த்தகம் ரூ. 3,834 கோடியாகும்.
பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சி டிசம்பர் 2—ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நிதிக் கொள்கையில் வட்டிக் குறைப்பு நடவடிக்கை நிச்சயம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை முன்னெப்போதைக் காட்டிலும் குறைவாக இருந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 5.3 சதவீதத்தை எட்டியுள்ளது. ஜூன் காலாண்டில் இது 5.7 சதவீதமாக இருந்தது. வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதையே இது காட்டுகிறது. இருப்பினும் எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிக அளவு வளர்ச்சியே எட்டப்பட்டுள்ளது.
போதிய அளவு பருவமழை இல்லாததே சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேலும் குறையும் என வேளாண் துறை கணித்துள்ளது.
வெள்ளியன்று முடிந்த அமெரிக்கசந்தை எந்தவித மாற்றமில்லாமல் முடிந்துள்ளது.தற்போது நடந்துவரும் ஆசியசந்தைகளும் மாற்றமில்லாமல் வர்த்தகமாகிறது.
நமது நிப்டி இன்று 10 புள்ளிகள் உயர்வுடன் 8598 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8622,8633,8677
நிப்டி சப்போர்ட் 8577,8533,8477

எங்களிடம் பரிந்துரைகள் வாங்கும் நண்பர்கள் இன்றும் நல்ல லாபமடைந்திருக்கிறார்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 FTSE 100 6,722.62 6,734.71 -0.80 -0.01%
 S&P 500 2,067.56 2,075.76 -5.27 -0.25%
 CAC 40 4,390.18 4,390.18 +7.84 +0.18%
 Dow 30 17,828.24 17,893.42 +0.49 +0.01%
 DAX 9,980.85 9,990.70 +5.98 +0.06%
 Hang Seng 23,987.45 24,117.16 -16.83 -0.07%

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..
குறள் 294: 
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்து ளெல்லாம் உளன்.
உரை: 
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.
Translation: 
True to his inmost soul who lives,- enshrined 
He lives in souls of all mankind.
Explanation: 
He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.