** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 13 November 2015

13/11/2015...TODAY OUR CALLS REPORT....

வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
ASIANPAINT              - 8 RS LOSS
ULTRATECCEM        -20 RS LOSS
BPCL                         + 16 RS PROFIT
DRREDDY                +80 RS PROFIT
COALINDIA             + 5  RS PROFIT
NIFTY                       +47 POINTS PROFIT
COALINDIA 340 CE  + 4800 RS PROFIT

MARKET DOWN 62 POINT OUR CALLS GIVE GOOD RETURN.

இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ASIANPAINT 803 TGT 815 SL 795 ( SL HIT )
BUY ULTRATECCEM 2710 TGT 2760 SL 2690 ( SL HIT )
BUY BPCL 889 TGT 905 SL 880 ( MADE HIGH 907 )
BUY DRREDDY 3320 TGT 3400 SL 3290 ( 3408 )
BUY BUY COALINDIA 334 TGT 339 SL 328 ( MADE HIGH 341.50 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY NIFTY 7750 TGT 7820 SL 7730 ( MADE HIGH 7797 )
BUY COALINDIA 340 CE 4 TGT 8 SL 2 ( MADE HIGH 8 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.





ஃப்ரிட்ஜ்............................
ஃப்ரிட்ஜில் வைத்த தோசை மாவில் ஊற்றி சாப்பிட்ட தோசை நஞ்சாகி ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்...’ சமீபத்தில் செய்தித்தாள்களில் பரபரப்பாக அடிப்பட்ட இந்த செய்தி, குளிர்சாதனப் பெட்டியை பயன்படுத்தும் மக்களை பீதி கொள்ள வைத்தது. பாதுகாப்பாக இருக்கும் என நம்பி ஃப்ரிட்ஜில் வைக்கும் உணவே நஞ்சானால் என்ன செய்வது? ஒரு காலத்தில் ஆடம்பரத் தேவையாக இருந்த ஃப்ரிட்ஜ் பிறகு மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறியது. இன்றோ மீதமான உணவுகளைப் பாதுகாக்கிற கிடங்காகவே அதை மாற்றிவிட்டார்கள்.
வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானவை தானா? எந்தந்த உணவுப்பொருட்களை எத்தனை நாள் வைக்க வேண்டும்?
குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் வாணி விஜய்யிடம் கேட்டோம்...
40 டிகிரி முதல் 140 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில்தான் உணவில் பாக்டீரியா போன்ற கிருமிகள் வளரும். அதைத் தவிர்த்து உணவுகளை பதப்படுத்தி வைக்கவே ஃப்ரிட்ஜை கண்டுபிடித்தார்கள். 1980களில்தான் நடுத்தர குடும்பங்களும் பயன்படுத்தும் விலையில் ஃப்ரிட்ஜ்கள் கிடைக்க ஆரம்பித்தன. சமைத்த உணவுப்பொருட்கள் மீதமானால், அவற்றைப் பாதுகாத்து அடுத்த நாள் பயன்படுத்த ஃப்ரிட்ஜ் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இன்றைய நிலையில் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ஃப்ரிட்ஜில் பொதுவாக 3 அடுக்குகள் உள்ளன. ஃப்ரீசர் என்னும் மேலடுக்கில் மாமிச உணவுகளான மட்டன், சிக்கன், மீன் ஆகியவற்றை ஒரு மாதம் வரை பாதுகாக்கலாம். ஆனால், வெளியே எடுத்தால் உடனடியாக சமைத்து விடுவதே நல்லது. இந்த அடுக்கில் 0 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு கீழே வெப்பநிலை இருப்பதால், வைக்கும் பொருட்கள் உறைபனி நிலையில் இருக்கும். மாமிச உணவுகளை வெளியே எடுத்து நன்றாக கழுவி சமைக்க வேண்டும்.
அதற்கு அடுத்து உள்ள அடுக்குகளில் சமைத்த உணவுகளை வைக்கலாம். இந்த அடுக்கில் ஒரு டிகிரி முதல் 2 டிகிரி ஃபாரன்ஹீட் வரையே வெப்பநிலை இருக்கும். கீழ் உள்ள அடுக்குகளில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதற்கென உள்ள பெட்டிகளில் போட்டு வைக்க வேண்டும். பழச்சாறுகள், சாஸ், முட்டை, டின் உணவுகள், சாக்லெட் ஆகியவற்றை பக்கவாட்டு அடுக்கில் வைக்க வேண்டும். இந்த அடுக்குகளின் வெப்பநிலை 3 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் குறைவாக இருக்கும்.
காய்கறிகள், பழங்களை நன்றாக கழுவி காற்று புகக்கூடிய பேக்கில் போட்டு அதற்குரிய பெட்டிகளில் அடுக்க வேண்டும். காய்கறிகள், பழங்களை பிரத்யேகமான கூடைகள், ஜிப்லாக் கவர்களில் வைப்பது பாதுகாப்பானது.சமைத்த உணவை 3 மணி நேரத்துக்குள் ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும். 2 நாட்களுக்குள் அதை எடுத்து சூடுபடுத்தி சாப்பிட்டு விட வேண்டும். சமைத்த உணவுகளை தனியாகவும், சமைக்காத உணவுகளை தனியாகவும் வைக்க வேண்டும். இரண்டையும் கலந்து வைக்கக் கூடாது.
வீட்டில் அரைக்கிற மாவை அரைத்த உடன் ஃப்ரிட்ஜில் வைத்தால் 4 நாட்கள் வரையிலும், புளித்த மாவை 24 மணி நேரத்துக்குள்ளும் உபயோகித்துவிட வேண்டும். கடையில் வாங்கும் மாவை உடனுக்குடன் உபயோகிக்க வேண்டும்.பாக்கெட்களில், பாட்டில்களில் வரும் ஊறுகாய், சாஸ்கள், இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைத்தாலும், எக்ஸ்பயரி தேதி பார்த்து உபயோகிப்பதே நல்லது. 3 மாதம் வரை பயன்படுத்தலாம் என போட்டிருக்கும்.
ஆனால், பேக்கிங்கை பிரித்த பின் ஒரு வாரம்தான் பயன்படுத்தலாம் என்றும் போட்டிருப்பார்கள். இதையெல்லாம் கவனித்தே பயன்படுத்த வேண்டும். பேக்கிங்கை பிரித்த பின் 3 மாதங்கள் வரை பயன்படுத்தினால், அது நமது உடலுக்கு நஞ்சாகிவிடும். சில உணவுப்பொருட்கள் காற்று புகாத பேக்கில் வரும். இந்த வகை பேக்கை பிரித்து விட்டு மூடினாலும் பாக்டீரியா பரவ வாய்ப்புண்டு. பிரித்து உபயோகித்த உடனே இறுக்கமாக மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.
லிஸ்டிரியா மோனோசைட்டோஜீன்ஸ்’ என்ற பாக்டீரியாதான் உணவை கெட வைத்து விஷமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்டெரப்டோகாக்கஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆகிய பாக்டீரியாக்களும் தன் பங்குக்கு உணவுகளை கெட்டுப்போகச் செய்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் அனைத்தும் திறந்த உணவுகளின் மீதுதான் காற்றின் மூலம் வளருகின்றன. 40 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் உள்ள பொருட்களில்தான் இந்த பாக்டீரியாக்களால் வளர முடியும். குளிர்சாதனப் பெட்டியில் உள்ள குறைவான வெப்பநிலையால், அங்கு இந்த பாக்டீரியாக்களால் பரவ முடியாது. உணவும் கெட்டுபோகாமல் சில நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும்.
நட்சத்திர ஹோட்டல்களுக்கான மட்டன், மீன், இறால் போன்றவை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இது எப்படி சாத்தியம்? அங்கே அந்த மாமிசங்களை வெட்டி சுத்தப்படுத்தி 0 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் ஃப்ரீசரில் பாதுகாத்து அனுப்புவார்கள். இங்கே வந்ததும் அதை ஹோட்டலில் உள்ள ஃப்ரோஸன் பகுதியில் (Frozen zone) வைத்துவிடுவார்கள். மாமிசத்தை தண்ணீரில் சுத்தப்படுத்தி சமைப்பார்கள். இப்படி பாதுகாக்கப்படும் உணவுகள் 2 மாதங்கள் வரை தாக்குப் பிடிக்கும். கிருமிகளால் இந்த வெப்பநிலையில் வளர முடியாததே இதற்குக் காரணம்.
ஆனால், கடைகளில் ஃப்ரோஸன் உணவுப்பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி மின்சாரம் போகும் கடைகளில் இவ்வகை உணவுப்பொருட்களை வாங்கக்கூடாது. திங்கட்கிழமை முழுவதும் கடையில் மின்சாரம் இல்லை. அந்தக் கடையில் ஜெனரேட்டரும் இல்லை என்று வைத்துக்கொள்வோம். செவ்வாய்க் கிழமை அந்தக் கடைக்கு சென்று ஃப்ரோஸன் பேக்கில் உள்ள ஏற்கனவே சமைத்த சிக்கனை வாங்கினால், கண்டிப்பாக அதில் பாக்டீரியாக்கள் பரவியிருக்க வாய்ப்புண்டு. அதை வாங்கி வந்து நமது வீட்டு ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சமைத்து சாப்பிட்டால் புட் பாய்ஸன் ஆக வாய்ப்புகள் அதிகம்.
ஒரு உணவு கெட்டிருக்கிறது என்பதை அதன் தோற்றம், அதில் இருந்து வரும் நாற்றத்தை வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். சுவைத்துப் பார்க்கக்கூடாது. அது விஷத்தை வலிய சாப்பிடுவதற்கு சமம். இரண்டு நாள் ஃப்ரிட்ஜில் வைத்த சட்னியில் லேசான நாற்றம் இருந்தாலும், ‘சாப்பிட்டுப் பார்ப்போமே’ என தோசையை சட்னியில் தொட்டு வாயில் வைத்து சுவைத்துப் பார்ப்பார்கள். இப்படிச் செய்வது விபரீத விளையாட்டாகும். கெட்டுப் போயிருக்கிறது என சந்தேகம் வந்தாலே உணவை குப்பையில் போட்டுவிடுங்கள். இல்லையெனில் உங்கள் வயிறு குப்பைத் தொட்டியாகிவிடும்.
வாரக்கணக்கில் காய்கறிகளை வாங்கி ஃப்ரிட்ஜில் அடைத்து வைக்கக்கூடாது. கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில், மனைவி ஒருநாள் சமைத்தால் கணவன் ஒருநாள் சமைக்கலாம். சமைக்கத் தெரியாவிட்டால் காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தாவது உதவலாம். இதுபோல பகிர்ந்துகொண்டால் சமையல் பொருட்களை ஃப்ரிட்ஜில் பாதுகாத்து வைக்கத் தேவையிருக்காது. ஃப்ரிட்ஜில் பாலை வைத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். தயிர், மோர் ஆகியவற்றை அன்றன்றே பயன்படுத்துவது நல்லது. பழங்களை அதிகபட்சம் 4 முதல் 5 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். முட்டையை ஃப்ரிட்ஜில் வைத்த 3 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும்.
மாமிச உணவுகளை ஃப்ரீசரில் வைக்கும் போது நன்றாகக் கழுவி, அலுமினியம் பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும். சிலர் மீனை வெட்டி மசாலா, மஞ்சள்பொடி தடவி அதை ஃப்ரிட்ஜில் வைத்து விடுவார்கள். அடுத்த நாள் எடுத்து பொரிப்பார்கள். இது உண்மையில் சிறந்த முறை. மஞ்சள் பொடியும் மசாலாவும் பிரிசர்வேட்டிவ் ஆகச் செயல்பட்டு மீனை அதே சுவையுடன் ஃப்ரெஷ்ஷாக வைக்கும்.ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூடக்கூடாது. ஃப்ரிட்ஜை சரியாக மூட வேண்டும். இல்லாவிட்டால், பூச்சிகள் புகுந்துவிடும். இதனாலும் உணவு நஞ்சாகலாம்.
ஏதாவது ஒரு உணவுப்பொருள் மற்ற உணவுடன் கலந்தாலோ அல்லது அதன் மேல் சிந்தினாலோ அதை பயன்படுத்தாமல் வெளியே எடுத்துவிட வேண்டும். ஃப்ரிட்ஜை வாரம் ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும். டப்பாக்களை வெளியே எடுத்து சுத்தமாக கழுவி உலர்த்தி உள்ளே வைக்க வேண்டும். சிலர் ஃப்ரிட்ஜில் இருந்து முடைநாற்றம் வரும் வரை கழுவ மாட்டார்கள். நாற்றம் வந்தால் அந்தப் பொருட்களை உடனடியாக ஃப்ரிட்ஜில் இருந்து அப்புறப்படுத்தி விட வேண்டும். மின்சாரம் போய்விட்ட நாளன்று, ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட வேண்டும்.
Immunocompromised persons என்னும் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது. குறிப்பாக கர்ப்பிணிகள், புற்றுநோய்க்கு கீமோதெரபி எடுத்துக்கொள்பவர்கள், ஹெச்ஐவி வைரஸ் தாக்குதல் உள்ளவர்கள் பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக்கூடாது. ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்...’’
வாழ்க வளமுடன் !!!
13/11/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.

நேற்றைய நமது நிப்டி 41 புள்ளிகள் உயர்ந்து 7825 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 254 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 350 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 55 புள்ளிகள் சரிவுடன் 7770 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 9 சதவீதம் உயர்ந்து 112 கோடி ரூபாயாக இருக்கி றது. கடந்த வருடம் இதே காலாண்டில் 102.91 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்து 7,104 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 7,021 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 6.86 சதவீத மாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 6.14 சதவீத மாக இருந்தது. நிகர வாராக்கடனும் 3.38 சதவீதத்தில் இருந்து 3.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்றைய முகூர்த் வர்த்தகத்தில் இந்த பங்கு ரூ.68-ல் முடிவடைந்தது.
நிப்டி சப்போர்ட் 7770,7740
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 77820,7850,7900
13-Nov-2015Details
Dividends
DCM Shriram Ltd
Sundram Fasteners Ltd
Results
CESC Ltd
Coal India Ltd
EID Parry (India) Ltd
Eveready Industries India Ltd
GMR Infrastructure Ltd
Goldline International Finvest Ltd
IVRCL Ltd
Jammu and Kashmir Bank Ltd
Jindal Saw Ltd
Kaveri Seed Company Ltd
MMTC Ltd
Natco Pharma Ltd
Prestige Estates Projects Ltd
Rattanindia Power Ltd
Shipping Corporation of India Ltd
Sobha Ltd
T.V. Today Network Ltd
Wockhardt Ltd
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் 
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
 உரை:
துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்
Translation:
Who pain as pleasure takes, he shall acquire 
The bliss to which his foes in vain aspire.
Explanation:
The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.