** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday 20 September 2014

>>>>வாழ்வில் வெற்றி அடைய எளிய வழிகள்<<<<<

யாருக்காவது உதவும் என்னும் நோக்கில் பதிவிடுகிறேன்.

மாபெரும் திட்டங்கள் வகுப்பது ஒரு புறம் இருக்கட்டும். தினமும் சில எளிதான இலக்குகளை Easy Targets குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அன்றைய பொழுது சாய்வதற்குமுன் இதைச்செய்து முடித்துவிடுவேன் என்ற முனைப்புடன் செயலாற்றுங்கள்.
‘அட! நம்மால் நினைத்ததைச் செய்து முடிக்க முடிகிறதேÐ என்ற நம்பிக்கை உற்சாக ஊற்று உங்கள் உள்ளத்தில் பீறிட்டு எழுவதை உணர்வீர்கள்.
தினமும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவிர, உங்கள் வாழ்வின் உயர் லட்சியத்தை Life Project அடையும் நோக்கில், 10 பணிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை எப்படியும் அன்றைய பொழுதிற்குள் செய்து முடிக்க உறுதியுடன் செயல்படுங்கள். இரவு படுக்கும் முன் எவ்வளவு தூரம் நம் பணிகளை முடித்திருக்கிறோம் என்று மதிப்பீடு செய்து பாருங்கள். விகடனின் விமர்சனக் குழு மார்க் போடுவதûப் போல இது போன்ற தினசரி மதிப்பீடு ‘Self-assessment’ நீங்கள் உங்கள் நேரான பாதையை விட்டுவிலகாமல், உங்களைக் காப்பாற்றும், ஒரே வெட்டில் மரம் வீழ்ந்து விடுவதில்லை.
நீண்ட தூரங்களையும் ஒவ்வொரு மைலாகத்தான் கடக்க வேண்டும். நம் இலட்சிய மாளிகையை அடைய ஒவ்வொரு அடியாகத் தொடர்ந்து, நேரான பாதையில் நடை போடுவோம். சிறுசிறு வெற்றிகளையும் கொண்டாடும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வோம்.
சிந்தனையில் தெளிவும், செயலாற்றுவதில் உறுதியும் இருக்கும் வரை எந்தச் சக்தியாலும் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது.
ஈரோட்டில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 23 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 21/9/2014 ஈரோட்டில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 23வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 600 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


வாழ்க்கை------

வாழ்க்கையில் எல்லாம் இருந்தால்தான் முன்னேற முடியும் என்பதில்லை. இருப்பதை வைத்துக் கொண்டும், ஏன்? இல்லாமையையே மூலதனமாக்கிக் கொண்டும் உயர்ந்தவர்கள்தான் நாட்டில் அதிகம். அவர்கள் தாம் சாதனையாளர்களாக விளங்கி உள்ளார்கள். அரிய சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார்கள்.

சாதனை என்பது என்ன? அவரவர் அளவில் செய்ய முடியாத ஒன்றைச் செய்து காட்டுவதுதான் சாதனை. நடக்க முடியாதவன் நடந்து காட்டுவது சாதனை. வறுமையில் கிடந்தவன், வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டது சாதனை. இப்படி சாதனையின் அளவுகோல் ஆளைப் பொருத்து மாறுபடும் என்பது அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.
வாழ்க்கை-----

வாழ்க்கை ஓரிரு நாட்களில் ஓரிரு நிகழ்ச்சிகளோடு முடிந்து விடுவதில்லை. வாழ்க்கை என்பது நெடியது, நீண்டது. நீண்டு கொண்டே செல்வது. ஆனால் நம் வாழ்நாள் குறுகியது. இந்த குறுகிய வாழ்நாளில் நாம் சாதிக்க வேண்டிய சாதனைகள் ஏராளமாக உள்ளன. அதை விடுத்து அற்ப விசயங்களுக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை ஒரே நாளில் தொலைத்துவிடக்கூடாது. அப்படித் தொலைத்துவிட்டு அதைச்
சரிசெய்வதற்கே வாழ்நாள் முழுவதும் அல்ல்ல்படுகின்ற சிலரை நாம் வாழ்க்கையில் காண்கிறோம். அவர்களுடைய வாழ்க்கையே நமக்கு எச்சரிக்கையாகும்.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 229: 
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய 
தாமே தமியர் உணல்.
உரை:
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.
Translation: 
They keep their garners full, for self alone the board they spread;- 
'Tis greater pain, be sure, than begging daily bread!.
Explanation: 
Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.