** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday 13 December 2014

மகிழ்ச்சியான எண்ணவோட்டத்திற்கு பதினெட்டு வழிகள்

இலட்சியமும் இலக்குகளும் உடையவராய் இருத்தல்.
என்றும் புன்னகையுடன் இருத்தல்.
சந்தோஷமான சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிர்தல்.
மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடிய மனப்பான்மை கொண்டிருத்தல்.
மனத்தை குழந்தை மனம் போல் வைத்திருத்தல்.
பலதரப்பட்ட மனிதர்களுடன் நட்புடன் இருத்தல்.
ஆச்சரியங்கள் வரும் போது, அமைதி காத்தல்.
நகைச்சுவை உணர்வைக் கொண்டிருத்தல்.
மற்றவர்களை மன்னித்தல்.
உண்மையான நண்பர்கள் சிலரை கொண்டிருத்தல்.
குழுவாக எப்போதும் பணிகளை ஆற்ற வேண்டும்.
குடும்ப ஒன்று கூடலின் போது களிப்புடன் இருத்தல்.
தன்னம்பிக்கை உடையதாகவிருப்பதோடு, உங்களைப் பற்றி திருப்தியடையுங்கள்.
பலவீனங்களைக் கூட மதியுங்கள்.
சிலவேளைகளில் உங்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்யுங்கள்.
நேரத்திற்கு நேரம் வேலை செய்யுங்கள்.
ஈடுபாடும் வீரமும் உடையவராய் திகழ்தல்.
ஒரு போதும் பணத்தை கூட்டிச் சேர்க்கும் குணம் குடிகொள்ளாது பார்த்துக் கொள்ள வேண்டும்
அறிவாளி, ஒருபோதும் சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.
ஆளுமைத் தன்மை வளர்ப்போம்.....

நீங்கள் நல்ல ஆளுமையுள்ளவர்களாக மாற விரும்புகிறீர்களா? அதற்கு சில விசயங்களை அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.
மனிதர்களை விரும்புங்கள்
எந்த மனிதரும் முழுமையாக நல்லவரோ அல்லது கெட்டவரோ இல்லை. எனவே நாம் அவரிடமுள்ள நல்லவைகளை எடுத்துக் கொண்டு அவரை நம்ப வேண்டும். இப்படிச் செய்வதால் அவரும் நம்மீதுஅதே மனோ நிலை கொள்வார், நம்மை மிகவும் மதிப்பவராகவும் மாறுவார்.

புன்னகை செய்யுங்கள்
மென்மையான புன்னகையின் சக்தி வலிமையானது. யாரைச் சந்தித்தாலும் புன்னகை முகத்தோடு முகமன் கூறும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நாம் புன்னகைத்தால் எதிரிலுள்ள மனிதரும் புன்னகை புரிந்தே தீருவார். ஒன்றிரண்டு பேரைத் தவிரை.
மனிதர்களின் பெயரை நினைவிலிருத்துங்கள்
நாம் சந்திக்கும் மனிதர்களிடம் அவர்களின் பெயரைச் சொல்லி கூப்பிடும் பழக்கம் வேண்டும்.. நாம் அவரின் பெயர் சொல்வதால் அவரிடம் நாம் நெருக்கமானவர் என்கிற ஆளுமை அவருக்குத் தோன்றும்.
தன்னைப் பற்றிப் பேசுவதை கைவிடுங்கள்
தன்னைப் பற்றிப் பேசுவதை விடுத்து எதிரிலிருப்பவரின் பேச்சை கேட்கும் பழக்கம் கொண்டால் எதிரிலிருப்பவர்க்கு நம்மை மிகவும் பிடிக்கும்.நல்ல கேட்பவராகுங்கள்.
எப்படிச் சொல்கிறோம் என்பதே முக்கியம்.
நாம் பேசும்போது, நம் பேச்சில் தவறு நேர்ந்தால் நாம் sorry என்போம். அதை உண்மையான வருத்தந் தோய்ந்த குரலில் நல்ல உடலசைவோடு சொன்னால் அது எதிரிலிருப்பவரை நிச்சயம் ஈர்க்கும். எனவே நம் உடலசைவுகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும், பணிவையும் நல்லமுறையில் பேணிக் காத்தல் மிக மிக அவசியம்.
மற்றவர்க்கு உதவுங்கள் .
ஒரு அலுவலகம் செல்லும் நேரத்தில் ஒரு விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றினால் அலுவலகம் போக நேரமாகலாம், அதற்காக அவருக்கு உதவிடாமல் சென்றால் அது மனித நேயமாகுமா? சுயநலமற்ற உதவும் போகே ஆளுமைத் தன்மையை வளர்க்கும் அருமருந்து.
அழகாக தோற்றமளிங்கள்
நமது முதல் அறிமுகம் எதிரிலுள்ளவரைக் கவர வேண்டும். இது மிக மிக முக்கியமானது.
உடல் அழகு, ஆடை அழகு என்பதல்ல இதன் பொருள். நேரத்திற்குத் தகுந்தாற்போல் சூழ்நிலைக் கேற்றவாறு ஆடை அணியுங்கள். சுத்தமான சுகாதாரமான தோற்றமும், சீரான தலைமுடி அமைப்பும், நகங்களின் சுத்தமும், காலணிகளின் சுத்தமும் எப்போதுமே நமது ஆளுமையை உணர்த்தும்.
எதிரிலிருப்பவரைப் புகழத் தயங்காதீர்கள்.
புகழ்ச்சியை விரும்பாத மனிதரில்லை .எதிரிலிருப்பவரை மனதார உண்மையாய்ப் புகழ்ந்திடுங்கள். பொய்ம்மையாய், செயற்கையாய் இருத்தல்கூடாது.
அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால் அல்ல; விடாமுயற்சியால்தான்
மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை
http://panguvarthagaulagam.blogspot.in/
கோயம்புத்தூரில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 32 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 14/12/2014 கோவையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 32 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 306: 
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும்.
 உரை: 
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.
Translation: 
Wrath, the fire that slayeth whose draweth near, 
Will burn the helpful 'raft' of kindred dear.
Explanation: 
The fire of anger will burn up even the pleasant raft of friendship.