** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 27 October 2016

27/10/2016...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
   இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தன. டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள்  சரிவை சந்தித்த நிலையில்  வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பமாகின. உலகளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவை சந்தித்து வருவது, அக்டோபர் மாதத்திற்கான டிரவேட்டிவ் செக்மண்ட் மீதான எதிர்பார்ப்பாலும் பங்குச்சந்தைகள் சரிவுடனயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 76 புள்ளிகள் சரிவுடன் 8615 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 30 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8655 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி நிகர லாபம் 20% உயர்வு
தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 20 சதவீதம் உயர்ந்து ரூ.3,455 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் லாபம் ரூ.2,869 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் ரூ.17,324 கோடியில் இருந்து ரூ.19,970 கோடியாக உயர்ந்திருக்கிறது.
மொத்த வாராக்கடன் 1.02 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 0.9 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடனும் 0.2 சதவீதத்தில் இருந்து 0.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வாராக்கடன் மற்றும் இதர செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.640 கோடியில் இருந்து ரூ.749 கோடியாக அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் அரையாண்டில் நிகர லாபம் 20.3 சதவீதம் உயர்ந்து ரூ.6,694 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.5,565 கோடியாக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1.05 சதவீதம் சரிந்து 1,250 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
கோடக் மஹிந்திரா நிகர லாபம் 28% உயர்வு
தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 28 சதவீதம் உயர்ந்து ரூ.1,202 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.942 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 8,415 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.6,729 கோடியாக இருந்தது.
இதர வருமானம் 66 சதவீதம் உயர்ந்து 2,881 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 2.49 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2.35 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடன் 1.20 சதவீதமாக இருக்கிறது. நிகர வட்டி வரம்பு 4.30 சதவீதத்தில் இருந்து 4.47 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. `காசா விகிதம்’ 39 சதவீதமாக இருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை சிறிதளவு உயர்ந்து ரூ.217 கோடியாக இருக்கிறது. டெபாசிட் வளர்ச்சி 15.41 சதவீதமாகவும், கடன் வளர்ச்சி 14.41 சதவீதமாகவும் இருக்கிறது.
யெஸ் பேங்க் வருவாய் ரூ.4,094 கோடி
யெஸ் பேங்க், கடந்த செப்., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 4,094.38 கோடி ரூபாயை, மொத்த செயல்­பாட்டு வரு­வா­யாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 3,377.24 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இந்த காலாண்டில், இந்­நி­று­வ­னத்தின் தனிப்­பட்ட நிகர லாபம், 31.31 சத­வீதம் உயர்ந்து, 610.41 கோடி ரூபாயில் இருந்து, 801.54 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. 
நிப்டி சப்போர்ட் 8590,8555
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8655,8685
27oct

divident
hcltech
results
bajaj fin
abb
maruthi
ioc
vijaya bank
tvs motor
ongc
techm
mrf
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 974
ஒருமை மகளிரே போலப் பெருமையும் 
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
 உரை:
தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.
Translation:
Like single-hearted women, greatness too, 
Exists while to itself is true.
Explanation:
Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.