** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday 22 February 2015

பிரார்த்தனை
ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்யுங்கள்;ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்யுங்கள்;நமக்கு மேலுள்ள சக்தியை-அவரவர்களுடைய இஷ்ட தெய்வத்தை- குல தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.தினமும் இரவு படுக்கைக்குச் செல்லுமுன் கிழக்கு நோக்கி அமர்ந்து இறைவா இன்றைய தினம் என்னுடைய வாழ்வில் பல சோதனைகள் செய்தாய் ! அந்த சோதனைகளில் நான் என்னையறியாமல் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து நாளைய பொழுது நல்ல பொழுதாக விடிய எனக்கு அருள்புரிய வேண்டும் என பிராத்தனை செய்துவிட்டு படுங்கள். அன்றைக்கு நமக்கு ஏதாவது நன்மைகள் நடந்திருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள்.இன்று இரவு எனக்கு அமைதியான தூக்கத்தைக் கொடு இறைவா! என்று நம்முடைய கவலைகள்,வருத்தங்கள் அனைத்தையும் ஆண்டவனிடம் ஒப்படைத்துவிட்டு ஏதாயிருந்தாலும் நாளைக் காலையில் ஆண்டவன் நமக்கு நல்வழி காட்டுவான் என்று நம்பிக்கையுடன் படுங்கள். அமைதியான, நிம்மதியான தூக்கம் வரும்.
காலையில் எழும்போது இறைவா இன்றைய பொழுது நல்ல பொழுதாக இருக்கவேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து விட்டு எழுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
பிரார்த்தனை நமக்கு உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்றது;நமக்கு வாழ்க்கை மீது இருக்கும் பயத்தைப் போக்கி தைரியத்தைக் கொடுக்கின்றது; நமது மனப் பதட்டத்தைப் போக்கி மன அமைதியைத் தருகிறது; இரவுப் பிரார்த்தனை மன அமைதியையும் நல்ல தூக்கத்தையும் தருகிறது; காலைப் பிரார்த்தனை அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்துடன் உழைக்கதேவையான மன வலிமையைத் தருகிறது. மனதையும் உடலையும் ரீசார்ஜ் செய்கிறது.
முஸ்லீம் அன்பர்கள் தினமும் 5 முறைத் தொழுகை செய்து உடலையும் உள்ளத்தையும் ரீசார்ஜ் செய்து கொள்கிறார்கள்.இந்துக்களாகிய நாம் ஒரு நாளைக்கு இரு முறையாவது ரிசார்ஜ் செய்து கொள்வோமே.
மீண்டும் சிந்திப்போம் !!
காலையில் முதல் உணவாக எலுமிச்சம்பழச் சாறு ஏன் அருந்த வேண்டும்?
நாம் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் சூடாக காபியோ அல்லது தேநீரோ தான் அருந்துகிறோம். ஒரு சிலர் காலையில் 2 லிட்டர் தண்ணீர் குடிக்கிறார்கள். 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்கலாம். ஆனால் அதை விட சிறந்த முதல் உணவு என்ன தெரியுமா? வெதவெதப்பான தண்ணீரில் கலந்த எலுமிச்சம்பழச் சாறு தான் சிறந்த காலை முதல் உணவு ஆகும். காலையில் முதல் உணவாக எலுமிச்சம்பழச் சாறு ஏன் அருந்த வேண்டும்? மேலே படியுங்கள்....
காலையில் முதல் உணவாக எலுமிச்சம்பழச் சாறு அருந்துவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. ஏன் ஆயுர்வேதத்திலும் இது சிறந்த காலை உணவாக சிபாரிசு செய்யப் படுகின்றது. அப்படி என்ன தான் எலுமிச்சம்பழச்சாற்றில் இருக்கிறது என்று பார்ப்போம்.
ஜீரணத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இரைப்பைக் குடலை தூண்டி சுத்தப்படுத்துகிறது.
கல்லீரலைத் தூண்டி சுத்தப்படுத்துகிறது.
வைட்டமின் C யும், அஸ்கார்பிக் அமிலமும் அதிக அளவில் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துகிறது.
காய்ச்சல், மற்றும் ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் நம் ஊரில் இது காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் அதிகபடுத்துவதாக நினைக்கின்றார்கள். அது தவறு.
இரத்தத்திலுள்ள நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
உங்கள் தோல் பள பளக்க உதவுகிறது.
உங்கள் உடலில் pH அளவு சீராக இல்லையென்றால் பலவிதமான நோய்கள் வரும். pH சரியாக இருக்க எலுமிச்சம்பழச்சாறு உதவுகிறது.
இது ஒரு இயற்கையான கிருமி நாசினி.
நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தி வாய்ந்தது.
புற்று நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் உள்ளதாக சொல்லுகிறார்கள்.
உடலுக்கு உடனடியாக சக்தியைத் தருகிறது.
வாய் சுகாதாரத்திற்கும் நல்லது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கும் நல்லது.
ஆகவே தினமும் காலையில் முதல் உணவாக இளஞ்சூட்டில் உள்ள தண்ணீருடன் எலுமிச்சம்பழச்சாற்றைக் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உங்களுக்கு மிகப் பெரிய நன்மைகள் உண்டாகும் என்பது உறுதி.
வேறு விதமாகவும் எலுமிச்சம்பழச்சாற்றைப் பயன்படுத்தலாம். தினசரி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் ஜொலிக்கும். தோலில் உள்ள அழுக்குகள் நீங்கும். எலுமிச்சம்பழச் சாற்றை தண்ணீரோடு கலந்து பிறப்பு உறுப்புகளை சுத்தம் செய்வது நல்லது. முக்கியமாக பெண்களுக்கு நன்மை பயக்கும்.
வாழ்க வளமுடன்!
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 371: 
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் 
போகூழால் தோன்றும் மடி.
 உரை: 
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.
Translation: 
Wealth-giving fate power of unflinching effort brings; 
From fate that takes away idle remissness springs.
Explanation: 
Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.