** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 15 May 2015

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்.........

‘இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்’ என்றார் காந்தி. விவசாயம் செய்யும் விவசாயிகளின் முதுகெலும்பே இன்று உடைக்கப்பட்டுள்ளது.
மழை ஒரு காரணம் என்றாலும், மிக முக்கியமான காரணம், விவசாயப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காததுதான். இடையில் இருப்பவர்களுக்கே லாபம் கிடைக்கிறது. அவர்கள் முதலீட்டுக்கு ஏற்ற லாபமும் கிடைப்பதில்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் கிடைப்பதில்லை. இந்தியா இன்னும் விவசாய நாடுதான் என்பதை இந்திய அரசு மறந்துவிட்டது.
தினமும் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய இடங்கள்!!!
பல் துலக்குவது
பற்பசையை சில பேர் பல் துலக்குகிறேன் என்று காலையில் சாப்பிட்டுவிடுவார்கள். கேட்டால் பல் துலக்கினேன் என்பார்கள். இடதுபுறமும், வலதுபுறமும், மேலே கீழே, நான்கு முறை பிரஷை விட்டு ஆட்டிவிட்டு வந்துவிடுவார்கள். இதனால் தான் பற்கள் மஞ்சள் நிறமாகின்றன. எனவே,சரியான முறையில், பற்களை மென்மையாக தேய்த்து துலக்க வேண்டியது அவசியம்.
நடுமுதுகு
நாம் எவ்வளவு முயற்சித்தாலும் தேய்த்து குளிக்க முடியாத இடம் என்றால் அது, நடுமுதுகு தான். அதற்கென்று என்ன செய்ய முடியும், திருமணம் ஆனவர்கள் கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் அதற்கெனவே சந்தையில் விற்கும் பிரஷை வாங்கி நன்கு தேய்த்துக் குளியிங்கள்.
விரல் நக இடுக்குகள்
சிலர் நகத்தை வெட்டுவதற்கே நால்வர் கூற வேண்டும். இந்த லட்சணத்தில் எங்கு நக இடுக்குகளில் அழுக்கு போக கழுவுவது. இது தான் மிக முக்கியம். கை விரல் நக இடுக்குகளில் சேரும் அழுக்கு, நீங்கள் சாப்பிடும் போது உடலுக்குள் போகும். இதனால் உங்கள் வயிற்றில் நிறைய பாக்டீரியாக்கள் சேருகின்றன.
பிறப்புறுப்பு பகுதி
சங்கோஜப்படும் ஆன்மாக்கள் செய்யும் தவறு, பிறப்புறுப்பு பகுதிகளை சுத்தம் செய்யாமல் இருப்பது. ஆண்களும் சரி, பெண்களும் சரி, அவர்களது பிறப்புறுப்புப் பகுதிகளை நன்கு கழுவ வேண்டியது அவசியம். இல்லையேல் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றது. முக்கியமாக பெண்கள்.
தொடை இடுக்குகளில்
தொடையின் இடுக்குகளில் தான் ஓர் நாளில் நிறைய வியர்வையின் காரணமாக அழுக்கு சேருகிறது. எனவே, அவ்விடங்களில் நன்கு தேய்த்து கழுவ வேண்டியது அவசியம். குளித்தப் பிறகு அந்த இடத்தில் உடல் துடைக்கும் டவலைக் கொண்டு ஈரம் போகும் வரை நன்கு துடைக்க வேண்டும்.
காது
குளிக்கும் போது முகம் கழுவுவோம், ஆனால், நிறைய பேர் காதுகளை சுத்தம் செய்ய மறந்துவிடுவார்கள். இதன் காரணமாக தான் சிலருக்கு காதுகளுக்கு அருகில் கருப்பு பிடித்தது போல், கரு கரு வென்று காதுகளின் கீழ் பாகங்கள் இருக்கும். மற்றும் இதனால் சரும தொற்றுகள் ஏற்படலாம்.

15/05/2015... வெள்ளி... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று சரிவுடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் இறுதியில் சிறு சரிவுடன் முடிந்தன.முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்றதால் தொடக்கத்தில் அதிக சரிவு இருந்தன. ஆனால் ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட ஏற்றம், பணவீக்கம் சரிந்தது, அதன்காரணமாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பால் பங்குசந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டன. ஆனபோதும் இறுதியில் பங்குசந்தைகள் சிறு சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 11 புள்ளிகள் சரிந்து 8224 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 191 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8244 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இமாமி நிகர லாபம் 24% உயர்வு
எப்எம்சிஜி துறையை சேர்ந்த நிறு வனமான இமாமியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 24% உயர்ந்து ரூ.138 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.111 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
நிகர விற்பனை 24 சதவீதம் உயர்ந்து 553 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர விற்பனை 445 கோடி ரூபாயாக இருந்தது. உள்நாட்டு விற்பனை சிறப்பாக இருந்ததால் விற்பனை வளர்ச்சி நன்றாக இருந்ததாக இமாமி நிறு வனம் அறிக்கையில் தெரிவித் திருக்கிறது. அதேபோல மார்ச் காலாண்டில் வெளிநாட்டு விற் பனையும் 48% உயர்ந்திருக்கிறது.
மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 485 கோடி ரூபாயாக உள்ளது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 402 கோடி ரூபாயாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர விற்பனை 2,217 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் 1,820 கோடி ரூபாயாக இருந்தது.
லுபின் நிகர லாபம் 1% சரிவு
மருந்து துறையில் முன்னணி நிறுவனமான லுபின் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 1 சதவீதம் சரிந்து 547 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 553 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் நிகர விற்பனை சிறிதளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 3,051 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 3,054 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் ஒட்டு மொத்த நிதி ஆண்டு நிகர லாபம் 30 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2013-14ம் நிதி ஆண்டில் 1,836 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம், 2014-15 நிதி ஆண்டில் 2,403 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
2013-14-ம் நிதி ஆண்டில் 11,086 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை, 2014-15 நிதி ஆண்டில் 12,599 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் ஒரு பங்குக்கு 7.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழுமம் பரிந்துரை செய்திருக்கிறது.
அதானி எண்டர்பிரைசஸ் நிகரலாபம் 74% சரிவு
அதானி குழுமத்தை சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 74% சரிந்து 737 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,847 கோடி ரூபாயாக இருந்தது.
மார்ச் காலாண்டில் மொத்த வரு மானத்தில் சிறிய சரிவு இருந்தது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 16,182 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 16,140 கோடி ரூபாயாக உள்ளது.
இந்த ஆண்டு எங்கள் குழுமம் வெள்ளி விழா கொண்டாடுகிறது. வருங்காலத்தில் எங்கள் குழுமம் தேசத்தின் வளர்ச்சிக்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யும் என்று நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்தார்.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் 12 சதவீதம் சரிந்தது. 2013-14-ம் மார்ச் காலாண்டில் 2,220 கோடி ரூபாயாக இருந்த நிகரலாபம் இப்போது சரிந்து 1,948 கோடி ரூபாயாக உள்ளது.
நிப்டி சப்போர்ட் 8199,8160,8100
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8230,8260,8300
Results
BF Utilities Ltd
Cadila Healthcare Ltd
Cox & Kings Ltd
Dena Bank
Edelweiss Financial Services Ltd
Future Consumer Enterprise Ltd
H T Media Ltd
Housing Development & Infrastructure Lt
IL&FS Transportation Networks Ltd
Jain Irrigation Systems Ltd
JK Lakshmi Cement Ltd
JSW Steel Ltd
Nestle India Ltd
Oracle Financial Services Software Ltd
Puravankara Projects Ltd
Schneider Electric Infrastructure Ltd
Tata Coffee Ltd
Torrent Pharmaceuticals Ltd
Videocon Industries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 452.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு.
 உரை:
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.
Translation:
The waters' virtues change with soil through which they flow; 
As man's companionship so will his wisdom show.
Explanation:
As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.