** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 15 May 2015

தினமும் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய இடங்கள்!!!
பல் துலக்குவது
பற்பசையை சில பேர் பல் துலக்குகிறேன் என்று காலையில் சாப்பிட்டுவிடுவார்கள். கேட்டால் பல் துலக்கினேன் என்பார்கள். இடதுபுறமும், வலதுபுறமும், மேலே கீழே, நான்கு முறை பிரஷை விட்டு ஆட்டிவிட்டு வந்துவிடுவார்கள். இதனால் தான் பற்கள் மஞ்சள் நிறமாகின்றன. எனவே,சரியான முறையில், பற்களை மென்மையாக தேய்த்து துலக்க வேண்டியது அவசியம்.
நடுமுதுகு
நாம் எவ்வளவு முயற்சித்தாலும் தேய்த்து குளிக்க முடியாத இடம் என்றால் அது, நடுமுதுகு தான். அதற்கென்று என்ன செய்ய முடியும், திருமணம் ஆனவர்கள் கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் அதற்கெனவே சந்தையில் விற்கும் பிரஷை வாங்கி நன்கு தேய்த்துக் குளியிங்கள்.
விரல் நக இடுக்குகள்
சிலர் நகத்தை வெட்டுவதற்கே நால்வர் கூற வேண்டும். இந்த லட்சணத்தில் எங்கு நக இடுக்குகளில் அழுக்கு போக கழுவுவது. இது தான் மிக முக்கியம். கை விரல் நக இடுக்குகளில் சேரும் அழுக்கு, நீங்கள் சாப்பிடும் போது உடலுக்குள் போகும். இதனால் உங்கள் வயிற்றில் நிறைய பாக்டீரியாக்கள் சேருகின்றன.
பிறப்புறுப்பு பகுதி
சங்கோஜப்படும் ஆன்மாக்கள் செய்யும் தவறு, பிறப்புறுப்பு பகுதிகளை சுத்தம் செய்யாமல் இருப்பது. ஆண்களும் சரி, பெண்களும் சரி, அவர்களது பிறப்புறுப்புப் பகுதிகளை நன்கு கழுவ வேண்டியது அவசியம். இல்லையேல் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றது. முக்கியமாக பெண்கள்.
தொடை இடுக்குகளில்
தொடையின் இடுக்குகளில் தான் ஓர் நாளில் நிறைய வியர்வையின் காரணமாக அழுக்கு சேருகிறது. எனவே, அவ்விடங்களில் நன்கு தேய்த்து கழுவ வேண்டியது அவசியம். குளித்தப் பிறகு அந்த இடத்தில் உடல் துடைக்கும் டவலைக் கொண்டு ஈரம் போகும் வரை நன்கு துடைக்க வேண்டும்.
காது
குளிக்கும் போது முகம் கழுவுவோம், ஆனால், நிறைய பேர் காதுகளை சுத்தம் செய்ய மறந்துவிடுவார்கள். இதன் காரணமாக தான் சிலருக்கு காதுகளுக்கு அருகில் கருப்பு பிடித்தது போல், கரு கரு வென்று காதுகளின் கீழ் பாகங்கள் இருக்கும். மற்றும் இதனால் சரும தொற்றுகள் ஏற்படலாம்.