** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday 16 August 2014

பாரத பிரதமர் மோடியின் சுதந்திர  தின உரை........

ஒவ்வொரு வீட்டிலிலும் மகள்கள்,மகன்கள் விஷயத்தில் பெற்றோர் முழு அக்கரை காட்ட வேண்டும்.வெளியே போகும் போது எங்கே போகிறாய் ,என்ன செய்கிறாய் என்று கேட்க வேண்டும்.
பாலியல் வன்முறை செய்பவனும் யாரோ ஒருவருடைய மகன் தான்.ஒவ்வொரு வீட்டிலும் மகன்களை தந்தை,தாய் கேட்க ஆரம்பித்தால்,இந்த நாட்டில் பாலியல் வன்முறை சம்பவங்களே நடக்காது.
மாவோயிஷ்ட் உருவாகமாட்டான்.
தீவிரவாதி உருவாக மாட்டான்.
நேபாளத்தை பாருங்கள்,பத்தாண்டு வன்முறைகளுக்கு பின்னர் யாருக்கும் லாபம் இல்லை,இழப்பு தான் என்று உணர்ந்ததும் அதை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்பினர்.
நேபாள மாவோயிஷ்ட் தீவிரவாதிகள் ஆயுதத்தை கைவிட்டு அமைதிக்கு திரும்பிவிட்டனர்.இங்கே மாவோயிஷ்ட்கள் எப்போது திரும்புவர்?.

ஒருவொருக்கொருவருடன் மோதிக்கொள்வதை விடுவோம்
ஒன்றாக போராடி வறுமையை வெல்வோம்.
மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவோம்.
அதில் கிடைக்கும் சந்தோஷம் நிலைக்கும்.