** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 26 September 2014

தியானம் செய்வதால் ஏற்படும் பலன்களை அறிவீர்களாக..

நாம் ஒரு நாளில் 24 மணி நேரத்தில் (1440 நிமிடத்தில் 5 முதல் 10 நிமிடம் வரை தியானம் செய்வதால் கீழ்காணும் பயன்களைப் பெறலாம்.


1. மன அமைதி தருகிறது.

2. நோய் இன்றி வாழ வழி செய்கிறது.

3. தீய பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை முற்றிலும் மாற்றி நல்வழிகாட்டுகிறது.

4. நம் தொழில் வளர்ச்சிக்கு நல்ல சிந்தனை தருகிறது.

5. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி பெற உதவுகிறது.

6. நமக்கு நல்ல சந்ததியைத் தருகிறது. மற்றும் ஏராளமான பலன்கள் உள்ளன.

தியானம் செய்வது எப்படி?

நாள்தோறும் முடிந்த அளவு 5 முதல் 10 நிமிடம் வரை அமைதியாக அமர்ந்து தாய், தந்தையரையும் உங்களுக்குப்பிடித்த தெய்வத்தையும் நினைத்து மனதை ஒருநிலைப்படுத்தி வந்தால் நிச்சயம் பயன்பெறலாம்.

முதலில் சிரம்மாக இருக்கும். பழகப் பழகத் தியான முறை எளிமையாகிவிடும். நீங்கள் ஆரம்பக்கல்வி படிக்கும்போது எழுத்துக்களை எழுதிப் பழக எவ்வளவு சிரமப்பட்டுக் கல்வி கற்று இருப்பீர்கள். அதைப்போலவே இதுவும்.

குறிப்பு:

1. இக் கருத்துக்களில் சந்தேகம் இருந்தால் உடல் நலம் காக்கும் மருத்துவரை அணுகி விவரம் அறியுங்கள்.

2. மேற்காணும் கருத்துக்களில் குறை நிறைகள் இருந்தால் தெரிவியுங்கள்.

3. ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தானால் பிறருக்குப் பயன்படச் செய்யுங்கள்.