** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 7 April 2015

07/04/2015..செவ்வாய்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 8659 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 117 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8699என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8633,8600,8575,
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8670,8690,8730
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா முதலிடத்தில் உள்ளது. வங்கி கொடுத்த கடனில் வாராக்கடன் மற்றும் கடனை மறுசீரமைப்பு செய்தது ஆகிய வற்றை சேர்க்கும்போது இந்த வங்கி முதலிடத்தில் இருக்கிறது.
இந்த வங்கி கொடுத்த கடனில் 21.5 சதவீத கடன்கள் (சொத்து) பிரச்சினையில் இருக்கிறது. இதற்கடுத்து யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் சொத்துகளில் 19.04 சதவீதம் பிரச்சினையில் இருக்கிறது. பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் 18.25 சதவீத சொத்துகளும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் 17.85 சதவீத சொத்துகளும் பிரச்சினையில் இருக்கிறது. இவை டிசம்பர் 31 நிலவரப்படி.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, அலகாபாத் வங்கி மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை கொடுத்த கடன்களில்15 சதவீதத்துக்கு மேல் பிரச்சினையாக (வாராக்கடன் மற்றும் கடனை மறுசீரமைப்பு செய்யப்பட்டதையும் சேர்த்து) உள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வருவது ரிசர்வ் வங்கிக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் பெரிய பிரச்சினை தருவதாக உள்ளது.
கடனை மறுசீரமைப்பு செய் தவை பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகும். கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியலில் இருக்கும் முதல் 30 நபர்கள் செலுத்த வேண்டிய தொகை மட்டும் 95,122 கோடி ரூபாய் ஆகும்.
பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடனில் இது மூன்றில் ஒரு பங்காகும். பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் டிசம்பர் 31, 2014 நிலவரப்படி 2,60,531 கோடி ரூபாயாகும்.
மார்ச் 2015 உடன் முடிந்த நிதி யாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட தயாராகி வருகின்றன இந்திய ஐடி நிறுவனங் கள்.
முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஏப்ரல் 24 ம் தேதி தனது காலாண்டு முடிவுகளை வெளி யிட உள்ளதாக அறிவித்துள்ளது. மற்றொரு முன்னணி நிறுவனமான டிசிஎஸ் தனது நான்காம் காலாண்டு முடிவுகளை ஏப்ரல் 16ம் தேதி அறிவிக்க உள்ளது.
ஏப்ரல் 24ம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் காலாண்டு முடிவு மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியிட உள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனம் ஏப்ரல் 21ல் தேதி தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது. இந்த நிறுவனம் 2014 ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் 29.8 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. அதுபோல டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமான வளர்ச்சி 31.2 சதவீதமாக இருந்தது.
விப்ரோ நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் தேதியை இன்னும் வெளியிடவில்லை.

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.