** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 6 October 2015

6/10/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டுள்ளன. சென்செக்ஸ் 565 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக நேற்றைய வர்த்தகம் துவங்கும்போதே கணிசமான உயர்வுடன் ஆரம்பித்தன. தொடர்ந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதால் நேற்றைய வர்த்தகம் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. இந்தாண்டில் இரண்டாவது முறையாக பங்குச்சந்தைகள் அதிக ஏற்றத்துடன் முடிந்துள்ளன. 
நேற்றைய நமது நிப்டி 168 புள்ளிகள் உயர்ந்து 8119 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 304 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 80 புள்ளிகள் உயர்வுடன் 8189 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
அதிக சந்தைமதிப்பு உள்ள நிறுவனங்களின் பட்டியலில் ஹெச்டிஎப்சி வங்கியை பின்னுக்கு தள்ளி இன்போசிஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் டிசிஎஸ் நிறுவனமும், இரண்டாவது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் உள்ளன.
ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பை விட இன்போசிஸ் சந்தை மதிப்பு 432 கோடி ரூபாய் அதிகமாக (அக்டோபர் 1 நிலவரப்படி) இருக்கிறது.
கடந்த வாரத்தில் பங்குச்சந்தை யின் ஏற்றம் காரணமாக இன் போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7,315 கோடி ரூபாய் உயர்ந்தது. ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் 4,570 கோடி ரூபாய் உயர்ந்தது. கடந்த வார வர்த்தகத்தில் (அக்டோபர் 1) தன்னுடைய 52 வார உச்சபட்ச விலையான 1,197 ரூபாய் என்ற விலையை இன்போசிஸ் பங்கு தொட்டது.
வரும் டிசம்பரில் நடக்க இருக்கும் கடன் மற்றும் நிதிக்கொள்கை அறிவிப்பில் வட்டி குறைப்பு ஏதும் இருக்காது. ஆனால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் 0.25 சதவீதம் வட்டி குறைப்பு இருக்கும், அதுவே இறுதியான வட்டி குறைப்பாக இருக்கும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா - மெரில் லிஞ்ச் அறிக்கை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இலக்குபடி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் இருக்கும். அதனால் பிப்ரவரியில் வெளியாகும் கடன் மற்றும் நிதிக்கொள்கை அறிவிப்பில் 0.25 சதவீத வட்டி குறைப்பு செய்யப்படும் என்று வங்கி கணித்திருக்கிறது.
மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது. வரும் ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 6 சதவீதமாக குறைய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்தது. அதற்கு கீழாக 5.8 சதவீதமாக பணவீக்கம் இருக்கும்.
அதே சமயத்தில் வளர்ச்சி குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. பருவமழை குறைவு, சர்வதேச அளவில் மந்தமான வளர்ச்சி விகிதம் ஆகியவை காரணமாக இந்தியாவிலும் வளர்ச்சி குறையும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்திருக் கிறது.
2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பணவீக்கம் 5 சதவீதத்துக்கு கீழ் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்த இலக்கின் மீது அனைவரது கவனமும் இருக்கிறது
நிப்டி சப்போர்ட் 8130,8080
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8170,8210,8250
06-Oct-2015Details
Splits
Cadila Healthcare Ltd
EGM
Bank of Maharashtra
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.