** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 8 June 2016

8/6/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..

நேற்றைய நிப்டி65 புள்ளிகள் உயர்ந்து 7748 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 17 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8276 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8260,8222,8180
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8300,8333
எப்எம்சிஜி துறையில் உள்ள முக்கிய நிறுவனமான ஹெச்யுஎல்-ன் (ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்) மார்ச் காலாண்டு நிகர லாபம் 7 சதவீதம் உயர்ந்து 1,089 கோடி ரூபா யாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 1,018 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
நிகர விற்பனை 3.36 சதவீதம் உயர்ந்து 7,809 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 7,555 கோடி ரூபாயாக இருந்தது.
இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 9.50 ரூபாயை வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய் திருக்கிறது. முன்னதாக இடைக் கால டிவிடெண்ட் 6.50 ரூபாய் கடந்த நவம்பரில் வழங்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் 16 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப் பட்டிருக்கிறது. 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது செயல்பாடுகளை தொடங்கிய பந்தன் வங்கி செப்டம்பர் முதல் மார்ச் 2016 வரையான காலத்தில் ரூ.275 கோடியை லாபமாக ஈட்டி யுள்ளது. வங்கி ஒரு கவுரமான லாபத்தை ஈட்டியுள்ளது என்று வங்கியின் நிறுவன தலைமை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சந்திரசேகர் கோஷ் தெரிவித்துள்ளார்.
வட்டி மூலமான வருமானம் ரூ.932 கோடியாகும். வட்டி அல் லாத பிற இனங்களின் மூலமான வருமானம் ரூ. 150 கோடி என்றும் அவர் கூறினார்.
7 மாதங்களில் வங்கி அளித்துள்ள கடன் அளவு ரூ. 15,493 கோடியாகும். திரட்டிய சேமிப்பு ரூ. 12,088 கோடியாகும்.
கரூர் வைஸ்யா வங்கியின் (கேவிபி) மார்ச் காலாண்டு நிகர லாபம் 138 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 137.83 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் காலாண் டில் மொத்த வருமானம் 1.9 சத வீதம் உயர்ந்து ரூ.1,536 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் ரூ.1,507 கோடியாக நிகர லாபம் இருந்தது.
ஒட்டு மொத்த 2015-16 நிதி ஆண்டில் நிகரலாபம் 22.3 சதவீதம் உயர்ந்து ரூ.567 கோடியாக இருக் கிறது. முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ.464 கோடியாக நிகர லாபம் இருந்தது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் 5,976 கோடி ரூபாயாக இருந்த மொத்த வரு மானம் 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.6,150 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக் கடன் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 1.85 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இப்போது 1.3 சதவீதமாக இருக்கிறது. ரூபாய் அடிப்படையில் பார்க்கும் போது மொத்த வாராக் கடன் ரூ.677 கோடியில் இருந்து ரூ.511 கோடியாக சரிந்திருக்கிறது.
அதேபோல நிகர வாராக்கடனும் 0.78 சதவீதத்தில் இருந்து 0.55 சதவீதமாக சரிந்திருக்கிறது. நிகர வாராக்கடன் ரூ.280 கோடி யில் இருந்து ரூ.216 கோடியாக சரிந்திருக்கிறது. வங்கியின் இயக் குநர் குழு இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.4 வழங்க பரிந் துரை செய்திருக்கிறது. முன்ன தாக இடைக்கால டிவிடெண்ட் ஒரு பங்குக்கு 10 ரூபாய் வழங்கப் பட்டது. கடந்த நிதி ஆண்டில் ஒரு பங்குக்கு மொத்தமாக 14 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்பட்டது.

8 june details

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 89000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM