** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 25 August 2016

25/8/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக தள்ளாட்டத்தில் இருந்த நிலையில்  உயர்வுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்தன
நேற்றைய நிப்டி 17 புள்ளிகள் உயர்வுடன்   8650 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 65 புள்ளிகள்  சரிவுடன் நிறைவடைந்தது.     ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது.  இன்று  நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8670 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8625,8600
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8666,8685
ஆர்பிஎல் வங்கியின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு வங்கி நிர் ணயித்த இலக்கை விட 70 மடங்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தனியார் வங்கி பொதுப் பங்கு வெளியீட்டுக்கு இந்த அளவு கூடுதல் விண்ணப்பங்கள் வந்தது இதுவே முதல் முறையாகும்.
மொத்தம் 2,63,73,00,965 பங்கு கள் கோரி விண்ணப்பங்கள் வந் துள்ளன. மொத்தமே 3,79,01,190 பங்குகளுக்குத்தான் வங்கி விண் ணப்பங்களை கோரியிருந்தது.
தகுதி வாய்ந்த நிறுவனங்கள் ஒதுக்கீட்டில் 85 மடங்கு கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதேசமயம் நிறுவம் அல்லாத முதலீட்டாளர்களிடமிருந்து 198 மடங்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில்லரை முதலீட்டாளர்களிட மிருந்து 5.58 மடங்கு கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மொத்தம் ரூ. 60 ஆயிரம் கோடிக்கு 10 லட்சத்து 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
கடந்த வாரம் ஆர்பிஎல் வங்கி ரூ. 364 கோடி மதிப்புக்கு 1.61 கோடி பங்குகளை ஒவ்வொன்றும் ரூ. 225 விலையில் ஒரு முதலீட்டாளருக்கு விற்பனை செய்தது. இப்போது வெளியாகியுள்ள பொதுப்பங்கு விலை ரூ. 224 முதல் ரூ. 225 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆர்பிஎல் வங்கி புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ. 832 கோடியும், ஒஎப்எஸ் எனப்படும் ஆபர் ஃபார் சேல் அடிப்படையில் ரூ. 380.46 கோடியும் திரட்ட உத்தேசித்துள்ளது.
இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு யெஸ் வங்கி பொதுப் பங்கு வெளியீட்டில் இறங்கியது. இதையடுத்து பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி 2010-ம் ஆண்டில் பங்கு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது
போலாரிஸ் கன்சல்டிங் மற்றும் சர்வீசஸ் நிறுவனம் ஜூன் மாதம் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ. 39.72 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபத்தை விட இது 8.2 சதவீதம் அதிகமாகும்.
இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 492 கோடியிலிருந்து ரூ.495 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த வெர்சூஸா நிறுவனம் போலாரிஸ் நிறுவனத்தில் பெருமளவு பங்குகளை ரூ. 1,173 கோடிக்கு வாங்கியது. தற்போது இவ்விரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன.
முதல் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் ரொக்கக் கையிருப்பு ரூ. 352 கோடி என நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி என்.எம். வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
அதானி பவர் நஷ்டம் ரூ.34 கோடி
அதானி பவர் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நஷ்டம் ரூ. 33.51 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் நஷ்டம் ரூ. 171.81 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் நிகர விற்பனை வருமானம் ரூ. 5,587 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ. 5,945 கோடியாக இருந்தது.
இந்நிறுவனம் 1,396 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அளித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த உற்பத்தி 1,586 கோடி யூனிட்டாக இருந்தது.
திரோடா மின்னுற்பத்தி நிலையத்தில் போதிய தண்ணீர் கிடைக்காததால் உற்பத்தி குறைந்தது. முந்த்ரா மின்னுற்பத்தி நிலையத்தில் 93 சதவீதமும், காவாய் மின்னுற்பத்தி நிலையத்தில் 97 சதவீத அளவுக்கு மின்னுற்பத்தி செய்யப்பட்டது.
எடெல்வைஸ் லாபம் ரூ.139 கோடி
எடெல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ நிறுவனத்தின் லாபம் 53 சதவீதம் அதிகரித்து ரூ.139 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 91 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 1,472 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.1,158 கோடியாக இருந்தது.
தனிப்பட்ட அளவீட்டின்படி நிறுவனத்தின் நிகர லாபம் 61 சதவீதம் சரிந்து ரூ. 11.52 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ. 29.57 கோடியாக இருந்தது. இதேபோல நிறுவன வருமானம் ரூ. 75.09 கோடியிலிருந்து ரூ. 92.99 கோடியாக அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கு1.62 சதவீதம் சரிந்து ரூ. 106 என்ற விலையில் வர்த்தகமானது.
கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் லாபம் 9% உயர்வு
கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் 9.19 சதவீதம் அதிகரித்து ரூ. 43.48 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 39.82 கோடியாகும்.
முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 332.81 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 230.28 கோடியாக இருந்தது. முதல் காலாண்டில் ரூ. 387 கோடி மதிப்பிலான அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டுத் திட்டத்துக்கான பதிவு ரூ. 312 கோடி. வர்த்தக இடங்களுக்கான பதிவு ரூ.75 கோடியாகும். முதல் காலாண்டில் 19 லட்சம் சதுர அடி பரப்பிலான இடத்தை நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. 12 நகரங்களில் வீடு மற்றும் வர்த்தக வளாக கட்டுமானங்களை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
சுந்தரம் பாசனர்ஸ் லாபம் ரூ. 75 கோடி
குழுமத்தின் அங்கமான சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.75.55 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.38.51 கோடியாக இருந்தது.
டிவிஎஸ் நிறுவனத்தின் வருமானம் ரூ. 713 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் வருமானம் ரூ. 631 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் ஏற்றுமதி வருமானம் ரூ. 225.81 கோடியிலிருந்து ரூ. 246.52 கோடியாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு விற்பனை வருமானம் ரூ. 455 கோடியாக அதிகரித்துள்ளது.
பிற ஆட்டோமொபைல் உற்பத்தித் துறையிலும் சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதால் லாபம் அதிகரித்துள்ளது
25 august
 divident
jk tyre
gnfc
str tech
results

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 100000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM