** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 2 January 2017

2/1/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்தாண்டின் கடைசி வர்த்தகநாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகி, உயர்வுடனேயே முடிந்தன. அதுவும் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிக ஏற்றத்துடன் முடிந்தன.  வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 211 புள்ளிகளும், நிப்டி 60 புள்ளிகளும் உயர்வுடன் ஆரம்பமாகின. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் இருந்தது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் இறுதியில் உயர்வுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 82 புள்ளிகள் உயர்வுடன் 8185 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 57 புள்ளிகள் சரிவுடன்  நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8195 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கடந்த ஆண்டு 26 நிறுவனங்களின் பொதுப்பங்கு வெளியானது. ஆனால் பிஎஸ்இ ஐபிஓ குறியீடு 0.3 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக் கிறது. ஆனால் சென்செக்ஸ் 2 சதவீதம் அளவுக்கு கடந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு 26 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் 26,494 கோடி ரூபாயைத் திரட்டின.
சரிவுக்குக் காரணம்
பல நிறுவனங்களின் ஐபிஓ-வுக்கு முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தாலும் சில ஐபிஓகள் சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால் ஐபிஒ குறி யீடு பெரிய அளவு உயரவில்லை. குறிப்பாக எல் அண்ட் டி இன்போ டெக், எல் & டி டெக்னாலஜி சர்வீசஸ் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்சியல் லைப் இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவன ஐபிஓகள் வெளியீட்டு விலையை விட 4 முதல் 10 சதவீதம் வரை சரிந்து வர்த்தகமாகின்றன.
கடந்த ஐந்து வருடங்களில் அதிக லாபத்தை கொடுத்த நிறுவனங்களின் பட்டியலை மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் ஆய்வு மூலம் வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டி யலில் டிசிஎஸ் நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து நான்காவது வருடமாக டிசிஎஸ் முதல் இடத்தில் இருக்கிறது.
முதல் 100 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.28.4 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்திருக் கிறது. இரண்டாவது இடத்தில் ஹெச்டிஎப்சி வங்கி இருக்கிறது. கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனங்களை இணைத்தல், பிரித்தல், புதிய பங்குகள் வெளி யீடு, பங்குகளை திரும்ப வாங்கு தல் ஆகிய அனைத்து பிரிவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டே இந்த பட்டியல் தயாரிக்கப்பட் டிருப்பதாக மோதிலால் ஆஸ்வால் தெரிவித்திருக்கிறது.
அஜந்தா பார்மா நிறுவனம் வேக மாக வளர்ந்த நிறுவனமாகவும், ஏசியன் பெயின்ட்ஸ் தொடர்ந்து சீராக வளர்ந்து வரும் நிறுவன மாகவும் கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த ஐந்து வருட காலத்தில் அஜந்தா பார்மாவின் சந்தை மதிப்பு 53 மடங்கு உயர்ந்துள்ளது. துறை வாரியாக பார்க்கும் போது கன்ஸ் யூமர் / ரீடெய்ல் ஆகிய துறை இரண்டாவது ஆண்டாக நல்ல வரு மானத்தை கொடுத்திருக்கிறது. மெட்டல் மற்றும் சுரங்கத்துறை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.
முதல் 100 நிறுவனங்களின் பட்டியலில் ஏழு பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இருக் கின்றன. பிபிசிஎல், ஹெச்பிசிஎல், பெட்ரோநெட் எல்என்ஜி, கான்கர், எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளன.
கடந்த ஐந்து வருடங்களில் சென்செக்ஸ் ஆண்டுக்கு 5 சதவீத வளர்ச்சி மட்டுமே கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த பட்டியலில் உள்ள நிறுவனங்கள் சராசரியாக 18 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. சந்தை எப்போது சரியும் என்று கணிப்பதை விட இது போன்ற பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம் என மோதிலால் ஆஸ்வால் தெரிவித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 8134,8080
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8216,8248
2 jan details
divident
result
bonus

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM