** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 16 November 2015

16/11/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் துவங்கிய பங்குச்சந்தைகள் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன. நாட்டின் தொழில்துறை உற்பத்தி சரிந்தது, பணவீக்கம் உயர்ந்தது போன்ற காரணங்களால் 
 வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து சரிவுடன் இருந்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன
நேற்றைய நமது நிப்டி 62 புள்ளிகள் சரிந்து 7762 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 202 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 7742 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7740,7710,7666
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7760,7780,7800
ஜேகே வங்கி நிகர லாபம் 13.5% உயர்வு
ஜம்மு காஷ்மீர் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 13.5 சதவீதம் உயர்ந்து 196 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 172 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
ஆனால் வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு குறைந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,883 கோடி ரூபாய் அளவுக்கு இருந்த மொத்த வருமானம் இப்போது 1,847 கோடி ரூபாய்க்கு சரிந்துள்ளது.
இந்த காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 4.73 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 6.46 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 2.46 சதவீதத்தில் இருந்து 2.78 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 17.20 சதவீதம் உயர்ந்து 354 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 302 கோடி ரூபாயாக இருந்தது.
ஜிஎம்ஆர் இன்பிரா நஷ்டம் ரூ.399 கோடி
ஜி.எம்.ஆர் இன்பிரா நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நஷ்டம் 399 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. மின்சார நிலையங்கள் மூலம் கிடைக்கும் செயல்பாட்டு லாபம் மற்றும் விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றின் காரணமாக நஷ்டம் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 609 கோடி ரூபாயாக நிகர நஷ்டம் இருந்தது.
நிறுவனத்தின் மொத்த விற்பனை சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 2,636 கோடி ரூபாயாக இருந்த மொத்த விற்பனை இப்போது 3,070 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
நிறுவனம் செலுத்த வேண்டிய வட்டி கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது 33 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது. கடந்த நவம்பர் 13-ம் தேதி இயக்குநர் குழுமம் முடிவெடுத்ததில் ராவா செக்யூரிட்டி சர்வீசஸ் நிறுவனம் துணை நிறுவனமாக மாற்றப்பட்டது.
கட்டுமானம்,சாலைகள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்களை செயல்படுத்தி வருகிறது ஜிஎம்ஆர் குழுமம்.
வெல்ஸ்பன் கார்ப் நிகர லாபம் ரூ.101 கோடி
பைப் தயாரிக்கும் நிறுவனமான வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்தின் நிகர லாபம் பல மடங்கு உயர்ந்து 101 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 5.25 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. ஆனால் நிறுவனத்தின் மொத்த வருமானம் 4 சதவீதம் உயர்ந்து 2,503 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,412 கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் செலவுகள் சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த வருடம் 2,326 கோடி ரூபாயாக இருந்த செலவுகள் இப்போது 2,312 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.
நிறுவனத்தின் வசம் 8.52 லட்சம் டன் அளவுக்கு ஆர்டர்கள் உள்ளன. இதன் மதிப்பு சுமார் 5,200 கோடி ரூபாய் ஆகும். அமெரிக்கா மற்றும் இதர சந்தைகள் சிறப்பாக உள்ளதால் அதிக ஆர்டர்கள் இருப்பதாக நிறுவனத்தின் தலைவர் பி.கே. கோயங்கா தெரிவித்தார்.
16-Nov-2015Details
Dividends
Credit Analysis & Research Ltd
Hexaware Technologies Ltd
Page Industries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் 
பொருத்தலும் வல்ல தமைச்சு.
 உரை:
அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.
Translation:
A minister is he whose power can foes divide, 
Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.
Explanation:
The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).


Sunday, 15 November 2015

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு 
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
 உரை:
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.
Translation:
A minister must greatness own of guardian power, determined mind, 
Learn'd wisdom, manly effort with the former five combined.
Explanation:
The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance.


Saturday, 14 November 2015

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 
அருவினையும் மாண்டது அமைச்சு.
 உரை:
உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.
Translation:
A minister is he who grasps, with wisdom large, 
Means, time, work's mode, and functions rare he must discharge.
Explanation:
The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).


பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

Friday, 13 November 2015

13/11/2015...TODAY OUR CALLS REPORT....

வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
ASIANPAINT              - 8 RS LOSS
ULTRATECCEM        -20 RS LOSS
BPCL                         + 16 RS PROFIT
DRREDDY                +80 RS PROFIT
COALINDIA             + 5  RS PROFIT
NIFTY                       +47 POINTS PROFIT
COALINDIA 340 CE  + 4800 RS PROFIT

MARKET DOWN 62 POINT OUR CALLS GIVE GOOD RETURN.

இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ASIANPAINT 803 TGT 815 SL 795 ( SL HIT )
BUY ULTRATECCEM 2710 TGT 2760 SL 2690 ( SL HIT )
BUY BPCL 889 TGT 905 SL 880 ( MADE HIGH 907 )
BUY DRREDDY 3320 TGT 3400 SL 3290 ( 3408 )
BUY BUY COALINDIA 334 TGT 339 SL 328 ( MADE HIGH 341.50 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY NIFTY 7750 TGT 7820 SL 7730 ( MADE HIGH 7797 )
BUY COALINDIA 340 CE 4 TGT 8 SL 2 ( MADE HIGH 8 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.





ஃப்ரிட்ஜ்............................
ஃப்ரிட்ஜில் வைத்த தோசை மாவில் ஊற்றி சாப்பிட்ட தோசை நஞ்சாகி ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்...’ சமீபத்தில் செய்தித்தாள்களில் பரபரப்பாக அடிப்பட்ட இந்த செய்தி, குளிர்சாதனப் பெட்டியை பயன்படுத்தும் மக்களை பீதி கொள்ள வைத்தது. பாதுகாப்பாக இருக்கும் என நம்பி ஃப்ரிட்ஜில் வைக்கும் உணவே நஞ்சானால் என்ன செய்வது? ஒரு காலத்தில் ஆடம்பரத் தேவையாக இருந்த ஃப்ரிட்ஜ் பிறகு மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறியது. இன்றோ மீதமான உணவுகளைப் பாதுகாக்கிற கிடங்காகவே அதை மாற்றிவிட்டார்கள்.
வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானவை தானா? எந்தந்த உணவுப்பொருட்களை எத்தனை நாள் வைக்க வேண்டும்?
குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் வாணி விஜய்யிடம் கேட்டோம்...
40 டிகிரி முதல் 140 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில்தான் உணவில் பாக்டீரியா போன்ற கிருமிகள் வளரும். அதைத் தவிர்த்து உணவுகளை பதப்படுத்தி வைக்கவே ஃப்ரிட்ஜை கண்டுபிடித்தார்கள். 1980களில்தான் நடுத்தர குடும்பங்களும் பயன்படுத்தும் விலையில் ஃப்ரிட்ஜ்கள் கிடைக்க ஆரம்பித்தன. சமைத்த உணவுப்பொருட்கள் மீதமானால், அவற்றைப் பாதுகாத்து அடுத்த நாள் பயன்படுத்த ஃப்ரிட்ஜ் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இன்றைய நிலையில் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ஃப்ரிட்ஜில் பொதுவாக 3 அடுக்குகள் உள்ளன. ஃப்ரீசர் என்னும் மேலடுக்கில் மாமிச உணவுகளான மட்டன், சிக்கன், மீன் ஆகியவற்றை ஒரு மாதம் வரை பாதுகாக்கலாம். ஆனால், வெளியே எடுத்தால் உடனடியாக சமைத்து விடுவதே நல்லது. இந்த அடுக்கில் 0 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு கீழே வெப்பநிலை இருப்பதால், வைக்கும் பொருட்கள் உறைபனி நிலையில் இருக்கும். மாமிச உணவுகளை வெளியே எடுத்து நன்றாக கழுவி சமைக்க வேண்டும்.
அதற்கு அடுத்து உள்ள அடுக்குகளில் சமைத்த உணவுகளை வைக்கலாம். இந்த அடுக்கில் ஒரு டிகிரி முதல் 2 டிகிரி ஃபாரன்ஹீட் வரையே வெப்பநிலை இருக்கும். கீழ் உள்ள அடுக்குகளில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதற்கென உள்ள பெட்டிகளில் போட்டு வைக்க வேண்டும். பழச்சாறுகள், சாஸ், முட்டை, டின் உணவுகள், சாக்லெட் ஆகியவற்றை பக்கவாட்டு அடுக்கில் வைக்க வேண்டும். இந்த அடுக்குகளின் வெப்பநிலை 3 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் குறைவாக இருக்கும்.
காய்கறிகள், பழங்களை நன்றாக கழுவி காற்று புகக்கூடிய பேக்கில் போட்டு அதற்குரிய பெட்டிகளில் அடுக்க வேண்டும். காய்கறிகள், பழங்களை பிரத்யேகமான கூடைகள், ஜிப்லாக் கவர்களில் வைப்பது பாதுகாப்பானது.சமைத்த உணவை 3 மணி நேரத்துக்குள் ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும். 2 நாட்களுக்குள் அதை எடுத்து சூடுபடுத்தி சாப்பிட்டு விட வேண்டும். சமைத்த உணவுகளை தனியாகவும், சமைக்காத உணவுகளை தனியாகவும் வைக்க வேண்டும். இரண்டையும் கலந்து வைக்கக் கூடாது.
வீட்டில் அரைக்கிற மாவை அரைத்த உடன் ஃப்ரிட்ஜில் வைத்தால் 4 நாட்கள் வரையிலும், புளித்த மாவை 24 மணி நேரத்துக்குள்ளும் உபயோகித்துவிட வேண்டும். கடையில் வாங்கும் மாவை உடனுக்குடன் உபயோகிக்க வேண்டும்.பாக்கெட்களில், பாட்டில்களில் வரும் ஊறுகாய், சாஸ்கள், இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைத்தாலும், எக்ஸ்பயரி தேதி பார்த்து உபயோகிப்பதே நல்லது. 3 மாதம் வரை பயன்படுத்தலாம் என போட்டிருக்கும்.
ஆனால், பேக்கிங்கை பிரித்த பின் ஒரு வாரம்தான் பயன்படுத்தலாம் என்றும் போட்டிருப்பார்கள். இதையெல்லாம் கவனித்தே பயன்படுத்த வேண்டும். பேக்கிங்கை பிரித்த பின் 3 மாதங்கள் வரை பயன்படுத்தினால், அது நமது உடலுக்கு நஞ்சாகிவிடும். சில உணவுப்பொருட்கள் காற்று புகாத பேக்கில் வரும். இந்த வகை பேக்கை பிரித்து விட்டு மூடினாலும் பாக்டீரியா பரவ வாய்ப்புண்டு. பிரித்து உபயோகித்த உடனே இறுக்கமாக மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.
லிஸ்டிரியா மோனோசைட்டோஜீன்ஸ்’ என்ற பாக்டீரியாதான் உணவை கெட வைத்து விஷமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்டெரப்டோகாக்கஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆகிய பாக்டீரியாக்களும் தன் பங்குக்கு உணவுகளை கெட்டுப்போகச் செய்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் அனைத்தும் திறந்த உணவுகளின் மீதுதான் காற்றின் மூலம் வளருகின்றன. 40 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் உள்ள பொருட்களில்தான் இந்த பாக்டீரியாக்களால் வளர முடியும். குளிர்சாதனப் பெட்டியில் உள்ள குறைவான வெப்பநிலையால், அங்கு இந்த பாக்டீரியாக்களால் பரவ முடியாது. உணவும் கெட்டுபோகாமல் சில நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும்.
நட்சத்திர ஹோட்டல்களுக்கான மட்டன், மீன், இறால் போன்றவை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இது எப்படி சாத்தியம்? அங்கே அந்த மாமிசங்களை வெட்டி சுத்தப்படுத்தி 0 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் ஃப்ரீசரில் பாதுகாத்து அனுப்புவார்கள். இங்கே வந்ததும் அதை ஹோட்டலில் உள்ள ஃப்ரோஸன் பகுதியில் (Frozen zone) வைத்துவிடுவார்கள். மாமிசத்தை தண்ணீரில் சுத்தப்படுத்தி சமைப்பார்கள். இப்படி பாதுகாக்கப்படும் உணவுகள் 2 மாதங்கள் வரை தாக்குப் பிடிக்கும். கிருமிகளால் இந்த வெப்பநிலையில் வளர முடியாததே இதற்குக் காரணம்.
ஆனால், கடைகளில் ஃப்ரோஸன் உணவுப்பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி மின்சாரம் போகும் கடைகளில் இவ்வகை உணவுப்பொருட்களை வாங்கக்கூடாது. திங்கட்கிழமை முழுவதும் கடையில் மின்சாரம் இல்லை. அந்தக் கடையில் ஜெனரேட்டரும் இல்லை என்று வைத்துக்கொள்வோம். செவ்வாய்க் கிழமை அந்தக் கடைக்கு சென்று ஃப்ரோஸன் பேக்கில் உள்ள ஏற்கனவே சமைத்த சிக்கனை வாங்கினால், கண்டிப்பாக அதில் பாக்டீரியாக்கள் பரவியிருக்க வாய்ப்புண்டு. அதை வாங்கி வந்து நமது வீட்டு ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சமைத்து சாப்பிட்டால் புட் பாய்ஸன் ஆக வாய்ப்புகள் அதிகம்.
ஒரு உணவு கெட்டிருக்கிறது என்பதை அதன் தோற்றம், அதில் இருந்து வரும் நாற்றத்தை வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். சுவைத்துப் பார்க்கக்கூடாது. அது விஷத்தை வலிய சாப்பிடுவதற்கு சமம். இரண்டு நாள் ஃப்ரிட்ஜில் வைத்த சட்னியில் லேசான நாற்றம் இருந்தாலும், ‘சாப்பிட்டுப் பார்ப்போமே’ என தோசையை சட்னியில் தொட்டு வாயில் வைத்து சுவைத்துப் பார்ப்பார்கள். இப்படிச் செய்வது விபரீத விளையாட்டாகும். கெட்டுப் போயிருக்கிறது என சந்தேகம் வந்தாலே உணவை குப்பையில் போட்டுவிடுங்கள். இல்லையெனில் உங்கள் வயிறு குப்பைத் தொட்டியாகிவிடும்.
வாரக்கணக்கில் காய்கறிகளை வாங்கி ஃப்ரிட்ஜில் அடைத்து வைக்கக்கூடாது. கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில், மனைவி ஒருநாள் சமைத்தால் கணவன் ஒருநாள் சமைக்கலாம். சமைக்கத் தெரியாவிட்டால் காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தாவது உதவலாம். இதுபோல பகிர்ந்துகொண்டால் சமையல் பொருட்களை ஃப்ரிட்ஜில் பாதுகாத்து வைக்கத் தேவையிருக்காது. ஃப்ரிட்ஜில் பாலை வைத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். தயிர், மோர் ஆகியவற்றை அன்றன்றே பயன்படுத்துவது நல்லது. பழங்களை அதிகபட்சம் 4 முதல் 5 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். முட்டையை ஃப்ரிட்ஜில் வைத்த 3 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும்.
மாமிச உணவுகளை ஃப்ரீசரில் வைக்கும் போது நன்றாகக் கழுவி, அலுமினியம் பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும். சிலர் மீனை வெட்டி மசாலா, மஞ்சள்பொடி தடவி அதை ஃப்ரிட்ஜில் வைத்து விடுவார்கள். அடுத்த நாள் எடுத்து பொரிப்பார்கள். இது உண்மையில் சிறந்த முறை. மஞ்சள் பொடியும் மசாலாவும் பிரிசர்வேட்டிவ் ஆகச் செயல்பட்டு மீனை அதே சுவையுடன் ஃப்ரெஷ்ஷாக வைக்கும்.ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூடக்கூடாது. ஃப்ரிட்ஜை சரியாக மூட வேண்டும். இல்லாவிட்டால், பூச்சிகள் புகுந்துவிடும். இதனாலும் உணவு நஞ்சாகலாம்.
ஏதாவது ஒரு உணவுப்பொருள் மற்ற உணவுடன் கலந்தாலோ அல்லது அதன் மேல் சிந்தினாலோ அதை பயன்படுத்தாமல் வெளியே எடுத்துவிட வேண்டும். ஃப்ரிட்ஜை வாரம் ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும். டப்பாக்களை வெளியே எடுத்து சுத்தமாக கழுவி உலர்த்தி உள்ளே வைக்க வேண்டும். சிலர் ஃப்ரிட்ஜில் இருந்து முடைநாற்றம் வரும் வரை கழுவ மாட்டார்கள். நாற்றம் வந்தால் அந்தப் பொருட்களை உடனடியாக ஃப்ரிட்ஜில் இருந்து அப்புறப்படுத்தி விட வேண்டும். மின்சாரம் போய்விட்ட நாளன்று, ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட வேண்டும்.
Immunocompromised persons என்னும் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது. குறிப்பாக கர்ப்பிணிகள், புற்றுநோய்க்கு கீமோதெரபி எடுத்துக்கொள்பவர்கள், ஹெச்ஐவி வைரஸ் தாக்குதல் உள்ளவர்கள் பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக்கூடாது. ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்...’’
வாழ்க வளமுடன் !!!